வேதாந்தாவின் இடைக்கால மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..

 


ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இதுநாள் வரை விசாரித்தது.

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை முழுத்திறனுடன் இயக்க, பயிற்சி பெற்ற, குறைந்தபட்சம் பத்தாண்டு துறைசார் அனுபவம் உள்ள 45 நபர்கள் தேவை. இந்த ஆக்சிஜன் உற்பத்திக்கூடம் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ.2 கோடி பராமரிப்பு செலவாகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அல்லது சுற்றுச்சூழல் அமைச்சகம் அல்லது சுப்ரீம் கோர்ட்டு நியமிக்கும் அமைப்பின் கண்காணிப்பின்கீழ், தெரிவிக்கப்படும் காலம் வரை ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை வேதாந்தா நிறுவனம் ஏற்று நடத்தத் தயாராக உள்ளது என தெரிவித்து வேதாந்தா நிறுவனம் கூடுதல் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று காலை 11 மணிக்கு விசாரிக்கிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!