வந்தா ரூ.500னு சொன்னாங்க”: பணம் தராததால் பேசும்போதே கலைந்த மக்கள் - அசிங்கப்பட்ட எடப்பாட பழனிசாமி!

 


குன்னூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்டம் சேர்ப்பதற்காக, ஆட்களுக்கு 500 ரூபாய் வழங்குவதாகக் கூறி அ.தி.மு.கவினர் அழைத்து வந்துள்ளனர். பணம் கொடுப்பது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகியும், அ.தி.மு.கவினர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அ.தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குன்னூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டம் சேர்ப்பதற்காக ஆளுங்கட்சியினர், ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் வழங்குவதாகக் கூறி ஆட்களை வாகனங்கள் மூலம் அழைத்து வந்தனர்.

அவ்வாறு அழைத்துவரப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு அ.தி.மு.கவினர் பணம் தராததால் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோதே பெண்கள் ஆண்கள் என பெரும்பாலானோர் வெளியேறினர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!