வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 10 மணிவரை அனுமதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தமிழக அரசுக்கு நன்றி

 


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கையை ஏற்று 

வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 10 மணிவரை அனுமதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தமிழக அரசுக்கு நன்றி

திருச்சி

வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 10 மணிவரை அனுமதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் 11.04.2020 ஞாயிற்றுக்கிழமை 

விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது :

கொரோனா நோய்தொற்று பரவலை கருத்தில்கொண்டு வழிபாட்டு தலங்களுக்கு இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி என அரசு செய்தி குறிப்பில் வெளியிட்டதை அடுத்து,  இஸ்லாமியர்கள் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் மாதத்தில் இரவு சிறப்பு தொழுகையை முன்னிட்டு வழிபாட்டு தலங்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைப்பினர் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தோம்

இதனையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளை தொடர்ந்து தொடர்புகொண்டு வலியுறுத்தியதை அடுத்து,

நேற்று இரவு வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 10 மணிவரை அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி, தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைப்பினர் ஆகியோர் நேரில் சென்றும் மற்றும் தொலைப்பேசியிலும் தொடர்பு கொண்டு பேசினார்கள். அதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் சந்தித்து கோரிக்கை மனுவாகவும் அளித்தார்கள். கோரிக்கையை ஏற்று உரிய உத்தரவு பிறப்பித்த தமிழக அரசிற்கும், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.     பல ஆண்டுகளாக தமிழக அரசு ரமலான் காலத்தில் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு விலையில்லாமல் பச்சரிசி வழங்கி வருகிறது ஆனால் இவ்வாண்டு இதுவரை அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வில்லை. எனவே உடனடியாக அரசாணை வெளியிட்டு பள்ளிவாசல்களுக்கு விலையில்லா பச்சரிசியை வழங்கிட கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)