பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு- கோவையில் கறுப்புக் கொடி- தாராபுரத்தில் கறுப்பு பலூன்கள்!

 


கோவை: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கறுப்பு கொடி காட்டிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக தாராபுரத்தில் கறுப்பு பலூன்களை கட்டிய விவசாய சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம், கேரளா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி இன்று காலை கோவை வருகை தந்தார். அங்கிருந்து கேரளாவின் பாலக்காடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.

தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை. ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தந்தை பெரியார் தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தாராபுரத்தில் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கறுப்பு பலூன்களை கட்டிய விவசாய சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய பாஜக அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கறுப்பு பலூன்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அனல் பறக்கும் தேர்தல் களம், சினிமா செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்..ஒன்இந்தியாவின் டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!