சென்னையில்ரிப்பன் கடையில் ரூ.4 கோடி ஹவாலா பணம் வருமான வரித்துறை பறிமுதல்

 


சென்னையில் ரிப்பன் கடையிலிருந்து கணக்கில் வராத நாலு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை பூக்கடை நாராயண முதலியார் தெரு மற்றும் ஏகாம்பர தெருவில் உள்ள ஆர்கே மெட்டல்ஸ் உள்ளிட்ட மூன்று ஹார்டுவேர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்‌.
விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு அதன் உரிமையாளர்களிடம் வருமான வரித்துறையினர் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் மகேந்திரா ரிப்பன் ஹவுஸ் கடையை கை காட்ட அங்கு சென்று சோதனை நடத்திய அதிகாரிகள் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து அதன் உரிமையாளரான மிதுனை விசாரணைக்காக அழைத்துச் செல்ல வருமான வரித்துறையினர் முயன்றனர்.
அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி சரிந்த மிதுனை ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைப்பற்றப்பட்ட 4கோடி ரூபாய் ஹவாலா பணம் எங்கு கொண்டு செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)