காங். தேர்தல் அறிக்கையில் 26 தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள் சென்னையில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டார்

 


காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி மாநில தலைவர் அழகிரி வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


  • தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை..

  • உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை..

  • கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு சம உரிமை..

  • தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்..

  • மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, மீனவர்கள் பழங்குடியின பிரிவில் சேர்க்க நடவடிக்கை..

  • 3 விவசாய சட்டங்களுக்கு பதிலாக தமிழகத்தில் விவசாயிகளை பாதுகாக்கும் புதிய சட்டங்கள்...

  • மாநில தகவல் ஆணையத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வர நடவடிக்கை..

  • நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கை..

  • காவிரி நீர் மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு தன்னாட்சி அமைப்பாக செயல்பட நடவடிக்கை..

  • கிராம தொழில்களை ஊக்குவிக்க 25 சதவீத மானியத்துடன் கடன் வசதி..

  • முதியோர் ஓய்வுத்தொகையை உயர்த்தி, அஞ்சல் துறை மூலம் நேரடியாக வழங்க நடவடிக்கை..

  • குடும்ப தலைவராக முதியோர் இருந்தால் வீடு தேடி ரேசன் பொருட்கள் கொண்டு சென்று வழங்கப்படும்..

  • கோயில்களில் இந்து மதத்தை சேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை..

  • சாதி மறுப்பு திருமணம் செய்தோர் ஆணவ படுகொலை செய்வதை தடுக்க நடவடிக்கை..

  • டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்..

  • பெண் கல்வியை ஊக்குவிக்க வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்த நடவடிக்கை..

  • மின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றால் போல் புதிய மின் திட்டங்கள் துவங்க நடவடிக்கை..

  • மாதம் ஒரு முறை விசைத்தறியாளர்களுக்கு மின் கணக்கீடு எடுக்க நடவடிக்கை..

  • பணியின் போது பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை..

  • இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை