தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 177 தொகுதிகளை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு

 



சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் மார்ச் 17 முதல் 22ம் தேதி வரை 8709 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதில் திமுக கூட்டணி 177 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி 47 இடங்களை கைப்பற்றும் எனவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுகவிற்கு தலா 3 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பிற கட்சியினர் இரண்டு இடங்களில் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது

சிறந்த முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை 43 விழுக்காடு பேர் தேர்வு செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு 29 விழுக்காடும், சசிகலாவுக்கு 8 விழுக்காடும் பதிவாகியுள்ளது

இதில் பாஜகவின் இந்துத்துவா அரசியல் தமிழகத்தில் எடுபடுமா என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு, 45 சதவீதம் பேர் எடுபடாது எனவும், 31 சதவீதம் பேர் ஆம் எனவும், 22 விழுக்காடு பேர் பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமா என்ற கேள்விக்கு, ஆம் என 41 விழுக்காடு பேரும், இல்லை என 42 விழுக்காடு மக்களும் பதிலளித்துள்ளனர்.

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்திலும் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அங்கு 38 தொகுதிகள் வரை திமுக கூட்டணி கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)