சிட்டாக பறந்த மஜ்னு.. டிக்கெட்டால் சிக்கிய லைலா..! இதுவும் காதல் கோட்டை தான்

 


சார்ஜா செல்லும் கணவரை வழியனுப்பி வைக்க வந்த இளம் பெண் ஒருவர், விமானம் ஏறும் வரையிலும் கணவர் உடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில், போலி விமான டிக்கெட் தயாரித்து சென்னை போலீசில் சிக்கிக் கொண்டார். திருமணமான சில தினங்களில் தன்னை பிரிந்து வெளிநாடு செல்லும் கணவரை சில நிமிடங்கள் கூட பிரிய மனமில்லாமல் பாசக்கார மனைவி எடுத்த ரிஸ்க் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த 25 வயது இளைஞர் நவாஸ் சேக் மற்றும் 23 வயதான அவரது மனைவி சனா இருவரும் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர்.

விமான பயணிகளுக்கான இ டிக்கெட்டை பாதுகாப்பு அதிகாரிகளிடம் காண்பித்து விட்டு உள்ளே சென்றனர். அத்தோடு அதே டிக்கெட்டை காண்பித்து பாதுகாப்பு சோதனை பகுதிக்குள்ளும் இருவரும் ஒன்றாகவே சென்றனர்.

இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு இளம் பெண் சனா மட்டுமே தனியாக விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். கேட்டில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அந்த பெண்ணை நிறுத்தி விசாரித்த போது தான் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக சனா தெரிவித்தார்.

தனது கணவர் மட்டுமே விமானத்தில் பயணிக்கிறார் என்று கூறிய சனா, தான் விமான நிலையத்திற்குள் செல்லும் போது கேட்டில் காண்பித்து விட்டு சென்ற இ டிக்கெட்டையும் காண்பித்தார். ஆனால் அந்த டிக்கெட்டில் பயணி ஆப்லோடு செய்யப்பட்டதற்கான எந்த முத்திரையும் குத்தப்படவில்லை. அந்த டிக்கெட்டில் ஒரு பயணிக்குரிய பி.என்.ஆர் எண் மட்டுமே இடம் பெற்று இருந்தது.

இதையடுத்து சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் , சனாவை வெளியில் விடாமல் தனியாக அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் கணவருக்கு பெறப்பட்ட இ-டிக்கெட்டில் தன்னுடைய பெயரை சேர்த்து கலர் ஜெராக்ஸ் எடுத்து போலியான விமான டிக்கெட் தயாரித்ததை ஒப்புக்கொண்ட சனா, அதற்கான காரணத்தையும் கண்ணீர் மல்க விவரித்தார்.

அண்மையில் தான் சனாவுக்கும், நிவாஸிற்கும் திருமணம் நடந்துள்ளது. கணவர் மீது தீராத காதலும் அன்பும் கொண்ட சனாவால், கணவர் தன்னை பிரிந்து வெளி நாடு செல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் வேலைக்கு செல்லும் கணவனை வழியனுப்பி வைக்க செல்லும் சாக்கில் உடன் சென்றுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்