எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் பழனிசாமி., உத்தரவிட்டார்.

 


சென்னை: ''விவசாயிகள் கடன் தள்ளுபடி அறிவிப்பை, 'போஸ்டர்' அடித்து, அனைத்து ஊர்களிலும் ஒட்டுங்கள்,'' என, எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் பழனிசாமி., உத்தரவிட்டார்.

சட்டசபையில் நேற்று பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நன்றி தெரிவித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வரிசையாக, முதல்வரின் இருக்கைக்கு சென்று நன்றி கூறினர். பெண் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர், முதல்வரின் கால்களை தொட்டு வணங்கினர். சட்டசபை கூட்டம் முடிந்த பின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், முதல்வர் மற்றும் துணை முதல்வரை சூழ்ந்து, நன்றி தெரிவித்தனர்.

அவர்களிடம் உற்சாகமாக பேசிய முதல்வர், ''விவசாய பயிர் கடன் தள்ளுபடி விபரத்தை, 'போஸ்டர்' அடித்து, அனைத்து பகுதிகளிலும் ஒட்டுங்கள். அரசின் சாதனைகளை, மக்களிடம் தெரியப்படுத்துங்கள். அனைவரும் அவரவர் பகுதிகளில், தேர்தல் பணியை செய்யுங்கள்; மற்றதை, நான் பார்த்துக் கொள்கிறேன்,'' என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்