வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்போம் - காங்கிரஸ், முஸ்லிம் லீக்


 மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்போவதாக காங்கிரஸ் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் அறிவித்துள்ளன.

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியதையடுத்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சை துண்டால் தலைப்பாகையை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)