பெண்களுக்கு எதிரான குற்றமா; இனி ஆயுள் தண்டனை தான்

 


சென்னை: தமிழக சட்சசபையில் சட்டத்துறை அமைச்சர் சி.விசண்முகம் இந்திய தண்டனை தொகுப்பு சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது, ‛ மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் 354 பி பிரிவான ஆடைகளை அகற்ற வைக்கும் எண்ணத்துடன் பெண்களை தாக்கிய குற்றம் நிரூபணம் ஆனால், 7 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை இனி 10 ஆண்டுகள வரை வழங்கப்படும்பெண்களை அச்சுறுத்தல் மற்றும் வெறுப்பேற்றும் வகையில் பின் தொடர்தல், பெண் மறுத்தும், அவருடன் தனிமையில் உரையாடுதல் போன்றவறறிற்கு 354டி பிரிவுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

 மைனர் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துதல் என்ற 372ம் பிரிவு பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தவோ, மனைர் பெண்களை விலைக்கு அல்லது வாடகைக்கு வாங்குதல் என்ற 373ம் பிரிவுக்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா ஒரு மனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)