தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்தில் பின்பற்றிய நடைமுறை என்ன? அரசு 4 வாரத்தில் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

 


தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்தில் பின்பற்றிய நடைமுறை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை நியமித்து, டிசம்பர் 30ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இவரது நியமனத்தை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், வெளிப்படையான அறிவிப்பு வெளியிடாமல்,

தகுதியானவர்கள் பெயர்களை பரிசீலிக்காமல், சட்ட அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன் ஆஜராகி, நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டதை எதிர்க்கவில்லை என்றும், வெளிப்படையான விளம்பரத்தை வெளியிடாமல் ஏற்கனவே ஒருவரை முடிவு செய்த 

பின் தேர்வுக் குழுவை கூட்டியதாகவும், அதன் கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் புறக்கணித்த நிலையிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)