விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.1.25 லட்சம் லஞ்சம்: கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்பட 2 பேர் கைது

 


பொள்ளாச்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட துணைப் பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து உள்ளனர்.

பொள்ளாச்சி தளவாய் பாளைய கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற 17 பேரின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் செல்வராஜா லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. 

தலைமை கூட்டுறவு சங்க செயலாளர் சிவாஜி கொடுத்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் துணைப் பதிவாளர் செல்வராஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆனைமலை கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்து உள்ளனர். 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை