சென்னையில் வழிகாட்டுதல் நெறிகளுடன் புத்தகக்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி

 


ழிகாட்டுதல் நெறிகளுடன் பிப்ரவரி மாதத்தில் 44வது சென்னைப் புத்தகக் காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.

வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை புத்தகக் காட்சிகள் நடைபெறும். 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள்,கைக்குழந்தைகளை புத்தகக் காட்சிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரங்கில் பார்வையாளர்கள் 3 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும், குளிர்சாதனம் பயன்படுத்தக்கூடாது , உள்ளே செல்லவும் வெளியேறவும் தனித்தனி வாயில்கள் அமைக்க வேண்டும்.

அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு அனுமதியைத் தொடர்ந்து விரைவில் புத்தகக்காட்சியின் தேதிகள் முடிவு செய்யப்படும் என்று பாபசி அறிவித்துள்ளது

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)