அமெரிக்க அதிபர் பதவியேற்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பு அதிகரிப்பு



அமெரிக்க அதிபர் பதவியேற்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்க அதிபர் பதவியேற்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வாஷிங்டனில் ஏராளமான ஆயுதங்களுடன் ஒருவர் சிக்கியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டிரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து வாஷிங்டன் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையைச் சுற்றி 15 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதமேந்திய காவலர்கள் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் வர்ஜீனியாவைச் சேர்ந்த வெஸ்லி ஆலன் பீலர் என்பவர் போலிச் சான்று மூலம் வாஷிங்டனுக்குள் நுழைய முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீசார், சோதனை செய்ததில் அவரிடம் கைத்துப்பாக்கி, 500 தோட்டாக்கள், ஷாட்கன் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆலன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வாஷிங்டன் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்