ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த 7000 நிறுவனங்கள் மீது நடவடிக்கை-185 பேர் கைது

 


ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த 185 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக நிதித்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் மிகவும் உச்சத்தை எட்டியது. சுமார் ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் கோடி தொகை வசூலானதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதாக மத்திய நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்வோர் மீது மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களில், போலியான பில்களைப் பயன்படுத்திய மற்றும் வரி ஏய்ப்பும் செய்த 185 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் நிதித்துறை செயலாளர் தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)