மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையே உள்ள சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் பெற வேண்டும் என்ற உத்தரவு நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்



துரவாயல், வாலாஜாபேட்டை இடையே உள்ள சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் மட்டுமே பெற வேண்டுமென்ற உத்தரவை மார்ச் 11 வரை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

அந்த சாலையை முறையாகப் பராமரிக்காதது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்தது. சாலையைச் சீரமைக்கும் வரை சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் பெற வேண்டும் என டிசம்பர் 9ஆம் நாள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு  நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 50 விழுக்காடு சுங்கக் கட்டணம் மட்டுமே பெற வேண்டும் என்கிற உத்தரவை மார்ச் 11 வரை நீதிபதிகள் நீட்டித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு