சேலத்தில் சாலை விதிகளை மீறுவோரை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வழக்குப் பதிவு செய்யும் முறை அறிமுகம்

சேலத்தில், சாலை விதிகளை மீறுவோரின் வாகன எண்களைத் துல்லியமாகப் படம் பிடித்து அபராதம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.


 


தலைக்கவசம் அல்லது சீட் பெல்ட் அணியாமலும், சிக்னலை மதிக்காமலும் செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணிக்க, ஐந்து ரோடு மற்றும் ஈரடுக்கு மேம்பாலத்தில், 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 12 தானியங்கி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


 


இதன் மூலம், சாலை விதிகளை மீறுவோரின் வாகன எண்கள் படம் பிடிக்கப்பட்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும்.


 


அங்கிருந்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போன்களுக்கு அபராதத் தொகை குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும். அபராதத்தை வாகன ஓட்டிகள் ஆன்லைனில் செலுத்தலாம் என சேலம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!