சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 8ம் தேதி முதல் கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 8ம் தேதி முதல் கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள், வாராந்திர ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


 


எழும்பூரில் இருந்து 8ம் தேதி முதல் மன்னார்குடிக்கு ஒரு சிறப்பு ரயிலும், சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு ஒரு சூப்பர்பாஸ்ட் ரயிலும், மங்களூர் சென்டிரல் மற்றும் பாலக்காட்டுக்கு தலா ஒரு ரயிலும் இயக்கபடுமென கூறியுள்ளது.


 


கோவை-நாகர்கோயில் இடையே ஒரு சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயிலும், எழும்பூரிலிருந்து குருவாயூர், ராமேஸ்வரத்துக்கு தலா ஒரு ரயிலும் இயக்கப்படுமென தெரிவித்துள்ளது.


 


எழும்பூரிலிருந்து நாகர்கோயிலுக்கு 10ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுமெனவும் கூறியுள்ளது. சிறப்பு ரயில்கள் அனைத்தும் முன்பதிவு பெட்டிகள் கொண்டவை எனவும், இதற்கான முன்பதிவு 2ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குமெனவும் அறிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா