போலீசாரின் செல்போன் சிக்னலை வைத்து.. சுற்றலில் விட்ட கும்பல்..! காட்டிக் கொடுத்த கருப்பு ஆடுகள்

சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை ஆக்ரா போலீசாரின் உதவியுடன் சென்னை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், இங்கிருந்து சென்ற தனிப்படை போலீசாரின் செல்போன் எண்களை, மகராஷ்டிரா காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளின் உதவியுடன் பெற்று, போலீசாரின் பாணியிலேயே செல்போன் சிக்னல்களை கண்டறிந்து தப்பிச்சென்று தண்ணி காட்டிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 


 


சென்னை சவுகார்பேட்டையில் பைனான்சியர் தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், அவரது மகன் ஷீத்தல் ஆகியோர் கடந்த 11-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில், ஷீத்தல் என்பவரின் மனைவி ஜெயமாலாவும், அவரின் இரண்டு சகோதரர்களான கைலாஷ், விலாஷ், உறவினர்கள் 6 பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டு முதலில் கைலாஷ், ரவீந்தரநாத்கர், விஜய் உத்தம் கமல் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தற்போது மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.


 


இதனிடையே, தலைமறைவாக இருந்த ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரரும் வழக்கறிஞருமான விலாஷ், ராஜூ ஷிண்டே ஆகிய மூவரும் ஆக்ரா போலீசார் உதவியுடன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.


 


இதில் வழக்கறிஞரான விலாஷுக்கு மகாராஷ்ட்ரா போலீசில் சில கருப்பு ஆடுகள் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகின்றது. அவர்கள் மூலமாக தங்களை தேடி வந்த தனிப்படை போலீசாரின் செல்போன் நம்பர்களை பெற்று, அதன் சிக்னலை வைத்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள், எங்கிருந்து எங்கு செல்கிறார்கள் போன்ற தகவலை வக்கீல் விலாஷ் ரகசியமாக பெற்று, போலீஸ் பிடியில் சிக்காமல் சாமர்த்தியமாக தப்பியதாக கூறப்படுகின்றது.


 


அதே நேரத்தில் வக்கீல் விலாஷ் கும்பலோ போலீஸ் வருவதை அறிந்து மகராஷ்டிர மாநிலம் சோலாப்பூர், புனே, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி என வெவ்வேறு இடங்களுக்கு செல்போன் எண்களை மாற்றிக் கொண்டே தப்பியதால், அவர்களை பிடிப்பது போலீசாருக்கு கூடுதல் சவாலாகவே இருந்தது.


 


விசாரணையில் விலாஷ், தனது நண்பர் மூலம் பல சிம்கார்டுகள் மற்றும் சாதாரண செல்போன்களை வாங்கியது தெரியவந்தது. இதன் பின் உஷாரான போலீசார் தங்கள் நகர்வையும், பிடிக்க செல்வதையும் முன்கூட்டியே அறிந்து 3 பேரும் தப்பி செல்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)