சென்னையில் பல இடங்களில் வெளுத்து வாங்கும் மழை..!

சென்னையில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.


 


சென்னையில் காலையில் இருந்தே மேகமூட்டமாக இருந்த நிலையில் லேசான மழை பொழிந்தது. அதிகாலை நேரத்தில் மெல்லிய தூறலாக இருந்து பின்னர் காலை 9 மணி அளவில் கனத்த மழை வெளுத்து வாங்கியது.


 


ராயப்பேட்டை, அண்ணாசாலை, நந்தனம்,திருவல்லிகேணி என பல இடங்களில் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. காலை நேரத்தில் அலுவலகங்களுக்கு இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்வோர், மழையில் நனைந்தபடியே சென்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு