தனி வீடுகள்.. தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..! ஏரியை வளைத்தவர்களால் வினை அப்பார்ட்மென்டுகள்..! ஏரியை வளைத்தவர்களால் வினை

நிவர் புயலின் தாக்கத்தால் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளான கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மழை நீர் வெள்ளம் போல புகுந்துள்ளது. ரியல் எஸ்டேட் அதிபர்களின் பேராசைக்கு பலிகடாவாகி தண்ணீரில் தத்தளிக்கும் சொந்த வீட்டுக்காரர்களின் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..


 


நிவர் புயல் தாக்கத்தால் கொட்டீத்தீர்த்துவரும் கனமழைக்கு சென்னையின் வேளச்சேரி ராம் நகர், விஜய நகர், புறநகர் பகுதிகளான கிழக்கு தாம்பரம், முடிச்சூர் வரதராஜபுரம், ஊரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையான நிகழ்வாக மாறிவருகின்றது.


 


போதிய மழை நீர் வடிகால்கள் இருந்தும் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் வேளச்சேரி ராம்நரில் சாலையில் கார் செல்கிறதோ இல்லையோ பருவமழைக்கு தவறாமல் படகு செல்வது வாடிக்கையான நிகழ்வாக மாறிப்போயுள்ளது.


 


இதனால் தங்கள் கார்களை முன் எச்சரிக்கையுடன் வேளச்சேரி பாலத்தில் வரிசைகட்டி நிற்கவைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.


 


லட்சங்கள் கொடுத்து வாங்கிய நிலத்தில் பார்த்து பார்த்து கட்டிய வீடுகளை சுற்றி ஒவ்வொரு மழைக்காலமும் வெள்ள நீர் தேங்குவதை அரிந்தும் அதனை விற்கவும் முடியாமல், விட்டுச்செல்லவும் முடியாமல் திக் திக் மன நிலையுடன் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.


 


கூடுவாஞ்சேரி ஏரி மற்றும் நந்திவரம் ஏரிகள் நிரம்பினால் தண்ணீர் அடையாற்றிற்கு பாய்ந்தோட வசதியாக அகலமான வடிகால் இல்லாததால் ஊரப்பாக்கம் அருள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாய்ந்து ஓடி அங்குள்ள மக்களை வெள்ளத்தில் தவிக்கவிட்டுள்ளதாக ஊரப்பாக்கம் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


 


அதே போல முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதிகளிலும் ஏரிகள் நிரம்பி கழிவு நீருடன் கலந்து வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேற இயலாமல் தவித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள்.நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்துள்ள மழை நீருடன் மீன்களும் நீச்சல் அடித்து வருகின்றது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)