சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.


 


வியாபாரிகள் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.


 


வழக்கு விசாரணை துவங்கிய நிலையில் 9 பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிபிஐ சார்பில் அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.


 


தொடர்ந்து 9 பேரையும் மீண்டும் அடுத்த மாதம் 10ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி வடிவேல் உத்தரவிட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)