சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.!

நிவர் புயல் காரணமாக, சென்னையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல், புதன்கிழமை இரவு வரையில் கொட்டித்தீர்த்த கனமழையால், பெருநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில், மழைநீர் தெப்பம் போல் தேங்கியதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், கடும் அவதிக்கு ஆளாகினர். 


 


வங்கக்கடலில் உருவான நிவர் புயல், சென்னையை அடுத்த மாமல்லபுரம், புதுச்சேரியின் காரைக்காலை இரு எல்லைகளாக வைத்து, சுற்றிச்சுழன்று கரையேறியது.


 


அதிதீவிர புயலாக நிவர் கரையை கடந்ததால், தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதோடு, கடலில் பேரலைகளும் எழுந்தன.


 


நிவர் புயல் காரணமாக, சென்னை பெருநகரில், செவ்வாய்க்கிழமை இரவு முதலே கனமழை விட்டுவிட்டு பெய்தது. இருப்பினும், ஏற்கனவே வானிலை மையம் கணித்தபடி, சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று அதிகாலை முதலே, கனமழை கொட்டித்தீர்த்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)