மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தலைக்கவசம் அணியாத ஆட்டோ ஓட்டுநருக்கு திருச்சி மாநகர காவல்துறை 100 ரூபாய் அபராதம் விதித்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.ல் சமீபகாலமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரின் வாகன எண்ணை குறித்துக்கொண்டு, இணைய வழியாக அவர்களின் தொலைபேசி எண்ணுக்கு அபராதம் குறித்த குறுந்தகவலை காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர். இதனால் பலருக்கு தாங்கள் எந்த இடத்தில், என்ன தவறு செய்தோம் என்பது தெரியாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (32). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 6ம் தேதி திருச்சி தில்லை நகர் வழியாக பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்ற இவரின் செல்போனுக்கு திருச்சி மாநகர காவல்துறையிலிருந்து குறுந்தகவல் கிடைத்துள்ளது. அதில் தலைக்கவசம் அணியாத காரணத்துக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.