அஸ்ஸாம்-மிசோரம் எல்லையில் வன்முறை : அமைதி காக்கும்படி இரு மாநில முதலமைச்சர்களும் கோரிக்கை
அஸ்ஸாம்-மிசோரம் எல்லையில் வன்முறை : அமைதி காக்கும்படி இரு மாநில முதலமைச்சர்களும் கோரிக்க
அஸ்ஸாம்-மீசோரம் எல்லையில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.
இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள 165 கிலோமீட்டர் எல்லை தொடர்பான பிரச்சினை நீடித்து வரும் நிலையில், இரு அரசுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
இந்நிலையில், ஒரு சாரார் எல்லையில் கூடாரங்களை அமைத்ததால் அதனை காலி செய்யும்படி இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
கம்புகள், கற்களைக் கொண்டு மோதியதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். வாகனங்கள் மற்றும் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. பதற்றமான சூழல் நிலவுவதால் இருமாநில எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்