மாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..!

கோவையில் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது பைபிள் வகுப்புக்கு சென்று வந்ததிலிருந்து 11 வருடமாக தொடர் பாலியல் தொந்தரவு செய்வதாக 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போதகர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 


கோவையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


 


அதில் தனக்கு நன்கு அறிமுகமான போதகரான சாமுவேல் ஜெய்சுந்தர் என்பவர் இஸ்டாகிராம், மற்றும் முகநூல் மூலம் தொடர்ந்து தனக்கு ஆபாச படங்களை அனுப்பியும் பேசியும் தொல்லை செய்து வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.


 


மேலும், தான் போத்தனூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 6 ஆம் வகுப்பு படிக்கின்ற போது அங்குள்ள மாணவிகளுக்கு பைபிள் போதனை வகுப்பு எடுப்பதற்கு வந்த போது அறிமுகமான சாமுவேல் ஜெய்சுந்தர். அன்றிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை சூழ் நிலைக்கு ஏற்ப தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக அந்த மாணவி குற்றஞ்சாட்டியுள்ளார்.


 


அதன் பின்னர் அவரது பழக்கத்தை துண்டித்த நிலையில் முகநூல் மூலமும், அதனை தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராம் மூலமும் சாமுவேல் ஜெய்சுந்தர் தொடர்ந்து ஆபாசமாக பேசுதல் ஆபாச படங்களை அனுப்புவது என்று தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும், எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தார்.


 


இதையடுத்து சாமுவேல் ஜெய்சுந்தரை விசாரணைக்கு அழைத்த போலீசார். கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பள்ளியில் படிக்கும் போது அத்துமீறி நடந்து கொண்டதாற்காக 9 வருடம் கழித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாமுவேல் ஜெய்சுந்தர் சிறையில் அடைக்கப்பட்டார்.


 


சென்னையில் உள்ள ஸ்க்ரிப்ட்சர் யூனியன் என்ற கிறிஸ்தவ மத போதக அமைப்பின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்த சாமுவேல் ஜெய்சுந்தர், ஏற்கனவே வேலூரிலும் இதே போன்று மாணவிகள் சிலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அவர், போதக அமைப்பில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.


 


மாணவிகள் தங்களுக்கு நடக்கின்ற பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து தங்களது பெற்றொர் மூலமோ அல்லது நேரடியாகவோ புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)