’’இது அடத்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்’’ - தமிழ்நாடு வெதர்மேன்.
சென்னையின் பல்வேறு பகுதியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அதை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், நேரு நகர் ஈக்காட்டுதாங்கல்,வேளச்சேரி எழும்பூர் ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
இதனால்வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர் இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்துட்விட் செய்துள்ளார்.அதில் சென்னையில் சில மணி நேரத்தில் 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை மழை பெய்துள்ளது மழைநீர் வடியும் வரை இன்னும் சில மணி நேரங்களில் தண்ணீர் தேங்கி இருப்பது சகஜம்தான்.
சென்னை மட்டும்மில்லை எந்த ஒரு நபராக இருந்தாலும் இதனை அடர்த்தியான மழை தாக்குப் பிடிப்பது கடினம் என குறிப்பிட்டுள்ளார்