எல்லாம் கிருப.. கிருப.. ரூ.57 லட்சம் ஸ்வாகா சி.எஸ்,ஐ பாதிரியார் கைது..! நீட் தேர்வில் வென்ற மாணவரிடம் மோசடி கட்டட

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவ சீட் பெற்றுதருவதாக கூறி நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரின் தந்தையிடம் 57 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்த வழக்கில் சி.எஸ்.ஐ தேவாலய பாதிரியாரும், அரசியல் கட்சி பிரமுகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செங்கல்பட்டு மாவட்டம் காரணை புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்ஜினியர் சீனிவாசனின் மகன் ஈஸ்வர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.


தன் மகனை, வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்த்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் சீட் கேட்டுள்ளார் சீனிவாசன். ஆனால் சி.எம்.சி நிர்வாகம் தேர்வு மூலமே மாணவர்களை தேர்வு செய்வதாக கூறி சீட் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.


இதையடுத்து நேர்வழியில் தனது மகனுக்கு சீட் கிடைக்காது என்பதை உணர்ந்த சீனிவாசனிடம், வேலூர் சி.எஸ்.ஐ தேவாலய பாதிரியார் சாய்நாதபுரம் சாது என்கின்ற சத்தியராஜை பிடித்தால் உங்களுடைய மகனுக்கு டாக்டர் சீட் கன்பார்ம் என்று , சி.எம்.சி யில் வேலை பார்க்கும் சிலர் குறுக்கு வழி யோசனையை தெரிவித்துள்ளனர்.


அதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ பாதிரியார் சாது சத்தியராஜை சந்தித்த சீனிவாசன் "தன் மகனுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை , சி.எம்.சி.யில் டாக்டர் சீட் வாங்கிக்கொடுக்கும்படி மன்றாடியதாக கூறப்படுகின்றது.


பாதிரியார் சாது சத்தியராஜோ விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் தேவக்குமார் மற்றும் அவரது தம்பி அன்பு கிராண்ட் ஆகியோரை சென்று சந்திக்குமாறு கூறி அனுப்பியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்