ஆன்லைன் ட்ரேடிங் நிறுவனம் நடத்தி சுமார் ₹ 20 கோடி வரை மோசடி என புகார் - ஒருவர் கைது

கோவை அத்திபாளையம் சித்தாபுதூர் பகுதியில் டெய்லி-மேக்ஸ் என்ற பெயரில் ஆன்லைன் ட்ரேடிங் நிறுவனம் நடத்தி வந்தவர் செந்தில்குமார்.


காரமடை பகுதியைச் சேரந்த இவர் நடத்திய ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன.


குறிப்பாக 1 லட்சம் செலுத்தினால் 100 நாட்களில் 2 லட்சமாக திருப்பித் தரப்படும் எனவும், 1 லட்ச ரூபாய் செலுத்தினால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்குவதுடன், வருடத்தின் முடிவில் 2 லட்சமாக பணம் திருப்பிக் கொடுக்கப்படும் எனவும் கூறி வாடிக்கையாளர்களிடம் முதலீடு பெற்றுள்ளார்.


கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தில் சுமார் 7 லட்சம் ரூபாய் பணம் செலுத்திய நிலையில் பணம் திரும்ப கிடைக்காததால் பொருளாதார குற்றபிரிவு காவல் துறையில் புகாரளித்தார்.


சரவணன் புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)