நெதர்லாந்தில் 2 அருங்காட்சியகங்களில் சுமார் ரூ.13 கோடி மதிப்புள்ள அரிய பொருட்கள் திருட்டு

நெதர்லாந்து 2 அருங்காட்சியகங்களில் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய பொருட்கள் திருட்டு போனதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 


2ம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட ராணுவ ஆயுதங்கள் மற்றும் பொருட்கள், பீக், ஓவர்லூன் ஆகிய 2 இடங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அருங்காட்சியகங்களின் கதவை உடைத்து, அரிய வகை தலைகவசங்கள், ராணுவ ஆயுதங்கள், சீருடைகள், துப்பாக்கிகள், தொலை நோக்கிகளை உள்ளிட்டவற்றை திருடர்கள் களவாடி சென்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு