மயிலாடுதுறை இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

மயிலாடுதுறையில் இளம்பெண்ணை காதலித்து கற்பமாககிய காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து கைது ரூபேஷ்குமார் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


நாகைமாவட்டம் மயிலாடுதுறை வில்லிய நல்லூரை சேர்ந்த சுபாஸ்ரீ என்ற இளம்பெண்ணிற்கும் நாகை மாவட்டம் தலைஞாயிறுவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் என்பவருக்கும் 2018 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டுளளது.


பின்னர் அது காதலாக மாறி தனிமையில் இருவரும் இருந்துள்ளனர். இதில் சுபாஸ்ரீ கர்ப்பமானார்.இந்த செய்தி இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.


இதிலிருந்து தப்பித்துக்கொள்ள என்ண்ணிய விவேக் ரவிராஜ், சுபஸ்ரீ யிடம் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துகொள்வோம். ஆதலால் கருவை கலைத்துவிடுமாறு வற்புறுத்தி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்து உள்ளார்.


நாளடைவில் சுபாஸ்ரீ இடம் பேசுவதை சப்-இன்ஸ்பெக்டர் தவிர்க்கவே சந்தேகம் அடைந்த சுபாஸ்ரீ தண்ணி உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சியுள்ளார் அப்போது இச்சம்பவத்தை வெளியில் கூறினால் உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொன்று புதைத்து விடுவேன் என்றும் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.


இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சுபாஸ்ரீ தகுந்த ஆதாரங்களுடன் தன்னை காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி நாகை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்த பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.


இதையடுத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய விவேக் ரவிராஜ் மீதும் இவரது தாயார் மீதும் சில தினங்களுக்கு முன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்தவழக்கின் அடுத்தகட்ட நகர்வாக இன்று நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் தற்போது உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த விவேக் ரவிராஜா பணியிடம் நீக்கம் செய்து ஜஜி ரூபேஷ்குமார் மீனா உத்தரவு பிறப்பித்து யுள்ளார்.


 


Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு