பள்ளி திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு ஏன்- தமிழக அரசு விளக்கம்..

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 40 நாள்களுக்கு முழு ஊரடங்கு தொடர்ந்து நிலையில், அதன்பிறகு மாத மாத புதிய புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுவருகிறது.


அதன் நீட்சியாக செப்டம்பர் 30-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. அதனை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். அதனையடுத்து, தற்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அந்த அறிவிப்பில், பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டறியலாம் என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்படியும், மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையிலும், கொரோனா நோய் பரவலின் தன்மையைக் கருத்தில் கொண்டும், தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)