தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கொடுக்க மறுத்தால் விபரீதங்களை சந்திக்க நேரிடும் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் கடந்த 2006,2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் எத்தனை அரசு பணியிடங்கள் காலியாக இருந்தன?அதில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எத்தனை பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுஉள்ளது.


மிகவும்பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேருக்கு அரசு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பன உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டுமென திருச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் முத்தையா தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார்.


இந்த தகவல்களை மனுதாரருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்க வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.


இந்த தகவலை வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் எனக் கூறி இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டியும், சட்டத்தில் விலக்கு உள்ளதாக கூறிய தகவல்களை வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.


மேலும் இதுபோன்ற தகவல்களை வழங்க மறுக்கும் பொது தகவல் அதிகாரிகள் பதவியில் நீடிக்க தகுதியில்லை என தெரிவித்த நீதிபதி, மனுதாரர் கோரிய தகவல்களை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டார்.


தகவல்களை வழங்க மறுத்த பொது தகவல் அதிகாரிகள், இன்னும் பதவியில் நீடிக்கிறார் இல்லையா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


தகவல்களை வழங்க மறுத்தால் சட்ட ரீதியான பிரச்சினையை சந்திக்க நேரிடும் என அனைத்துத் துறைகள்,பொதுத்துறை நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)