வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் சர்வதேச கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

வங்கி அதிகாரி போல தொலைபேசியில் பேசி வாடிக்கையாளரின் விவரங்களைப் பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைச் சுருட்டும் சர்வதேச கும்பலைச் சேர்ந்த 6 பேரை மும்பை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.


இது குறித்து போலீசார் தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் 6 பேரிடமிருந்த லேப்டாப்கள், சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட டேட்டா பேஸ்கள், ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலாத் பகுதியில் அவர்களின் தொலைபேசி உரையாடலைக் கேட்ட உளவுத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த 11ம் தேதி இரண்டு இடங்களில் போலீசார் அதிரடி சோதனைகளையும் நடத்தினர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்