வாழைப்பழங்களை விற்று படிப்பு செலவுகளுக்கு சேமிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவன்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தின் வாழ்தாரம் பாதிக்கப்பட்டு பெற்றோர் வறுமையில் வாடுவதை உணர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவர் வாழைப்பழம் விற்பனை செய்து வருகிறார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகர் பகுதியை சேர்ந்த முருகன் - கணேஷ்வரி தம்பதிக்கும் முனிஸ்வரன், கோகுல் என்ற 2 மகன்கள். இதில் முனிஸ்வரன் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


முருகன் - கணேஷ்வரி தம்பதியின் ஒப்பந்த அடிப்படையில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களது தொழில் முடக்கமடைந்தது. தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், சில மாதங்களாக தொழில் இல்லை என்பதால் மீட்டும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில் ஈடுபட போதிய பணம் இல்லாத காரணத்தினால் முருகன் தீக்குச்சி தயாரிக்கும் ஆலைக்கு வேலைக்கு சென்று வருகிறார்.


கணேஷ்வரி அப்பகுதியில் தள்ளுவண்டியில் பழங்கள், தேங்காய், முகக்கவசம் விற்பனை செய்து வருகின்றார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த தம்பதியினர் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தந்தைக்கு குறைவான வருமானம், தாய் பழ விற்பனையும் சரியாக நடைபெறவில்லை என்பதனை பார்த்த முனீஸ்வரன், தன்னுடைய குட்டி சைக்கிள் மூலமாக வாழைப்பழம் விற்பனை செய்து பெற்றோருக்கு உதவி வருகிறார். தினமும் காலை, மாலை 2 மணி நேரம், தனது சைக்களில் சிறிய பெட்டியை கட்டி, அதில் தாயிடமிருந்து வாழைப்பழம் வாங்கி கொண்டு அருகில் இருக்கும் பகுதிக்கு சென்று விற்பனை செய்து வருகிறார்.


தினமும் இதன் மூலம் கிடைக்கும் 200 ரூபாயை தாயிடம் கொடுத்து தனது பெற்றோருக்கு உதவி வருகிறார் சிறுவன் முனீஸ்வரன். கொரோனா ஊரடங்கு காரணமாக தனது பெற்றோர் சிரமப்படுவதை பார்த்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக வாழைப்பழம் விற்பனை செய்து வருவதாகவும், தினமும் 200 ரூபாய் கிடைப்பதாகவும், அதனை தனது தாயிடம் கொடுப்பதாகவும், அவர் 50 ரூபாய் கொடுப்பார் என்றும், அதனை தனக்கு நோட், புத்தகம் வாங்க சேமித்து வருகிறேன் என்று உற்சாகமாக கூறுகிறார் சிறுவன் முனீஸ்வரன்.


கொரோனா ஊரடங்கு தங்களது வாழ்வினை கடுமையாக பாதித்துள்ளதாகவும், நாங்கள் கஷ்டப்படுவதை பார்த்து, மூத்த மகன் முனீஸ்வரன் தனக்கு உதவி வருவதாகவும், பழம் விற்பனை செய்து வரும் பணத்தில் 50 ரூபாய் கொடுத்தாலும் அதனை செலவு செய்யாமல் சேமித்து வருவதாகவும், தங்களது கஷ்டம் உணர்ந்து தனது மகன் உதவி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார்


சிறுவனின் தாய் கணேஷ்வரி. விடுமுறை கிடைத்து விட்டது என்று விளையாட செல்லாமல் தனது பெற்றோரின் நிலைமையை உணர்ந்து வாழைப்பழம் விற்பனை செய்யும் சிறுவனை அப்பகுதி மக்கள் பாராட்டி வருவது மட்டுமின்றி, தினமும் சிறுவனை தேடி வாழைப்பழமும் வாங்கி உதவி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!