திருநெல்வேலி மாவட்டத்தில் 26.09.2020 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 234 மனுக்களுக்கு உடனடி தீர்வு.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பொது மக்கள் அளித்துள்ள புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் உடனடி தீர்வு முகாம் நடைபெற்றது.


அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்ததாவது மாவட்டத்தில் மனுக்கள் மீதான விசாரணை காலதாமதம் ஆவதை தடுப்பதற்காக மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் இந்த முகாம்களை நடத்த முடிவு செய்து அதன்படி தாழையூத்து உட்கோட்டத்திற்கு துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி அர்ச்சனா அவர்கள் தலைமையில் தாழையூத்து சிவந்தி ஆதித்தனார் மஹாலில் வைத்து குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது


இதில் 78 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது‌, நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்விஸ்ரீ லிசா ஸ்பிலா தெரஸ் அவர்கள் தலைமையில் சுப்பு லட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற முகாமில் 43 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது, வள்ளியூர் உட்கோட்ட பகுதியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு சுப்புராஜூ அவர்கள் தலைமையில் ஐயா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற முகாமில் 20 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது, அம்பாசமுத்திரம்


உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரான்ஸிஸ், அவர்கள் தலைமையில் அம்பை வேல்சாமி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற முகாமில் 30 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது, சேரன்மகாதேவி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு பிரதீப் இ.கா.ப அவர்கள் தலைமையில் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 64 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. அனைத்து உட்கோட்ட பகுதியில் மொத்தம் 234 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!