விஜய் மல்லையாவின் நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையா சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.


இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விஜய் மல்லையா இங்கிலாந்தில் உள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டால்ஜியோ நிறுவனம் மூலம் தன்னுடைய மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தார்.


இதுதொடர்பாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. 2017ல் இந்த வழக்கில் தலைமறைவுக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மல்லையா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.


Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு