தன் கையை தானே வெட்டிய ex.ராணுவ வீரர்.. கம்பத்தில் பகீர்..!
கைபிளேடால் கீறி ரத்தம் வெளியேறினாலே மயங்கி உயிரிழப்பு நேரிட வாய்ப்புள்ள நிலையில் கை மணிக்கட்டை துண்டாக வெட்டிய பிறகும் முன்னாள் ராணுவ வீரர் இருசக்கர வாகனத்தில் எவ்வித சிரமமும் இன்றி சென்றதுடன் போலீஸ்காரரிடம் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.
தேனிமாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வெங்கடேசன் குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து அதே பகுதியில் தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.