வேறொருவரின் உடலை அடக்கம் செய்த உறவினர்கள் - இறந்ததாகக் கருதப்பட்ட நபர் வீடு திரும்பினார்

உத்தரபிரதேசத்தில் உறவினர் இறந்து விட்டதாகக் கருதி வேறொரு நபரின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்த நிலையில், சம்பந்தப்பட்ட நபரே 2 நாட்களுக்கு பிறகு உயிருடன் வீடு திரும்பினார்.


சக்ரி அருகே ஓம்பூர்வா என்ற இடத்தில் வசித்து வருபவர் அகமது ஹசன், கடந்த 2ம் தேதி மனைவியுடன் சண்டையிட்டு அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைக் காணாமல் போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். அன்று மாலையே எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை அகமதுவின் உறவினர்கள் அது அகமது ஹசன்தான் எனத் தவறாக அடையாளம் காட்டினர்.


இதையடுத்து அந்த உடலை எடுத்துச்சென்று அடக்கமும் செய்தனர். இந்நிலையில் கோபம் தணிந்து அகமது ஹசன் அண்மையில் வீடு திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார், இறந்த சடலம் யாருடையது என புதிதாக விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த உடலின் டிஎன்ஏ பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!