ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு - உடலை இந்தியா கொண்டு வர பெற்றோர்கள் கோரிக்கை

தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ரஷ்யாவின் Volgograd பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்துவருகின்றனர்.


10-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் வால்கா நதிக்கரைக்கு சென்றபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்ட சக தமிழக மாணவரை காப்பாற்றும் முயற்சியில் மேலும் 3 மாணவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.


4 பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த மனோஜ் ஆகியோர் என தெரியவந்தது.


கொரோனா காலம் என்பதால், 4 பேரின் உடலை விரைவாக தமிழகம் கொண்டுவர இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)