திருப்பூர் மாநகராட்சி இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளி இடிப்பு

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிக் கட்டடத்தை காவல் துறையினரின் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை இடித்தனர். திருப்பூர் வாலிபாளையம் சடையப்பன் கோயில் அருகில் 1970 ஆம் ஆண்டு திருப்பூர் நகராட்சி காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டது.


இதைத்தொடர்ந்து, காய்கறி மார்க்கெட் கட்டடத்துடன் பள்ளி நடத்த தனியாருக்கு ரூ.150க்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த நிலையில், திருப்பூர் நகராட்சி சார்பில் 1982 ஆம் பள்ளிக்கட்டடத்தை காலி செய்யும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


ஆனால் பள்ளி நிர்வாகம் காலி செய்ய மறுத்ததுடன், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் தற்போது மாநராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.


இந்த தீர்ப்பின் அடிப்படையில் மாநகராட்சி உதவி ஆணையர்கள் தங்கவேல்ராஜன், சுப்பிரமணி ஆகியோர் காவல் துறையினரின் பாதுகாப்புடன் தனியார் பள்ளிக் கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலமாக 38 ஆண்டுகளுக்குப் பின்னர் ரூ.3 கோடி மதிப்பிலான மாநகராட்சி நிலம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்தப் பணியில் திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!