அமெரிக்காவில் முதியவரை தரையில் தள்ளிவிட்ட 2 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

அமெரிக்காவில் 75 வயது முதியவரை தரையில் தள்ளி விட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


காவல்துறையினரால் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தைக் கண்டித்து பஃபல்லோ நகரில் போராட்டம் நடைபெற்றது.


போராட்டத்தின் முடிவில் பொதுமக்கள் கலைந்து சென்ற நிலையில் எதிரில் வந்த 75 வயது முதியவரை போலீசார் இருவர் தள்ளி விட்டனர். எதிர்பாராத அந்த தாக்குதலால் நிலைகுலைந்து தரையில் விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.


கீழே விழுந்து காயமடைந்த முதியவரை கண்டுகொள்ளாமல் போலீசார் அங்கிருந்து நகர்ந்தனர்.


இதுகுறித்த தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அந்த காவல்துறை அதிகாரிகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த முதியவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு