சிகிச்சை பெற வந்தவரை 10 அடி தூரத்தில் நிறுத்தி பரிசோதித்த மருத்துவர்

விழுப்புரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டை வலிக்கு சிகிச்சை பெற வந்தவரை 10 அடி தூரத்தில் நிறுத்தி மருத்துவர் சோதனை செய்ததாக வீடியோ பதிவு ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டை வலி மற்றும் சளிக்காக இளைஞர் ஒருவர் சிகிச்சைக்கு வந்தார்.


அப்போது பணியில் இருந்த மருத்துவர் பிரகாஷ் என்பவர் இளைஞரை 10 அடி தூரத்திற்கு முன்பே நிறுத்தி டார்ச் லைட் அடித்து பரிசோதனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அருகில் இருந்தோர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.


இதனிடையே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படாததால் இளைஞரை தூரத்தில் இருக்க வைத்து மருத்துவர் பரிசோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)