நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..

நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு: பிடிஐ செய்தி


மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது


மே 3ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு


கொரோனா பாதிப்பில்லா பச்சை மற்றும் பாதிப்பு குறைந்த ஆரஞ்ச மண்டலங்களுக்கு மத்திய அரசு தளர்வுகள் அறிவிப்பு


சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் என வகைப்படுத்தப்பட்டு, ஊரடங்கு தளர்வு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அமல்படுத்தப்படும்: மத்திய அரசு


இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை, அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வரக் கூடாது: மத்திய அரசு


அனைத்து வகை மண்டலங்களிலும், 65 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது: மத்திய அரசு


மருத்துவ தேவையின்றி, முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் வெளியில் செல்லக் கூடாது: மத்திய அரசு


கொரோனா பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களில், ஏற்கனவே உள்ளதுபோன்று, ஆட்டோ, சைக்கிள் ரிக்சா, டாக்சிகள், பேருந்துகளை இயக்க கூடாது


கொரோனா பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களில், சலூன் கடைகள், ஸ்பாக்கள் உள்ளிட்டவற்றை திறக்கத் தடை


சிவப்பு மண்டலம்: அத்தியாவசிய தேவைக்காக செல்வோர் காரில்-2 பேரும்(ஓட்டுநர் உட்பட), பைக்கில் ஒருவர் மட்டுமே பயணிக்க அனுமதி


தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்; மற்றவர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு