பரிசோதிக்க வசதியில்லாமல் பெருகும் உயிர் பலி

நியூயார்க்: அமெரிக்க சுகாதார மையங்களில் பரிசோதனை நடத்த வசதியில்லாமல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


அமெரிக்காவில், 9.57 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு, கடந்த இரண்டு மாதங்களில், சுகாதார மையங்களில் கொரோனா பலி, 11 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பரிசோதனை நடத்த வசதியில்லாமல், பல சுகாதார மையங்கள் திணறி வருகின்றன.


அமெரிக்காவில், 15 ஆயிரம் சுகாதார மையங்கள் உள்ளன. அவற்றில், மூன்றில் ஒரு பங்கு மையங்களில் மட்டுமே, கொரோனா பரிசோதனைக்கான வசதிகளும், உபகரணங்களும் உள்ளன.


சோதனையில் ஏற்படும் தாமதம் காரணமாக, உயிர் பலி அதிகரிக்கிறது. எனவே, விரைவாக பரிசோதனை கருவிகளை வழங்க வேண்டும் என, மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அமெரிக்காவில், தினமும், 1.50 லட்சம் பேருக்கு, கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்