கொரோனா வைரஸை கண்டுபிடித்த சீனப் பெண் மருத்துவர் திடீர் மாயம்! சீனா மீது சந்தேகம்

இது கொரோனா தான்” எனக் கண்டுபிடித்த சீன வைத்தியர் 'ஏய் பென்' என்பவர் திடீரென மாயமாகி உள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


சீனாவின் வுஹான் மருத்துவமனையில் ஒரு நோயாளி இருமல் காய்ச்சலுடன் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வருகிறார்.


இவருக்கு இந்த மருத்துவமனையின் தலைமை பெண் மருத்துவர் ஏய் பென் நோயாளிக்கு ரத்த பரிசோதனை முடிவை பார்க்கிறார்.


முதலில் சார்ஸ் , புளூ காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இந்த டாக்டர் தனது மருத்துவ குழுவினருக்கு இந்த ரத்த பரிசோதனையை அனுப்பி வைக்கிறார்.


இது ஒரு புதிய வைரஸ் எனவே மேல் தரப்பு உத்தரவு இல்லாமல் வெளியே கூற முடியாது என சக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.


இதனை ஏய்பென் வெளியே தெரிவிக்க விரும்பி உள்ளார். ஆனால் மருத்துவ ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியினர் இந்த டாக்டரை அழைத்து எச்சரித்துள்ளனர்.


"வதந்திகளைப் பரப்புதல்" மற்றும் "ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவித்தல்" குற்றம் செய்ததாக அவர் கண்டிக்கப்பட்டார். இதனையடுத்து, வைரஸ் தொடர்பான செய்திகளையோ அல்லது படங்களையோ அனுப்ப ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.


இது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரிட்டன் நாளிதழான கார்டியனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறியிருப்பதாவது,


நான் தான் இந்த புதிய வைரசை கண்டுபிடித்தேன். தொடர்ந்து வுஹான் மருத்துவமனைக்கு வந்த பலருக்கும் இது போன்ற தொற்று இருந்தது.


ஒரு நோயாளி பாதிக்கப்பட்டபோது தொடர்பான விழிப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.


ஆனால் தற்போது உலகம் முழுவதும் நடக்கும் மரணத்திற்கு நானே காரணமாகி விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இந்நிலையில் டாக்டர் ஏய் பென் எங்கு இருக்கிறார் என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. சீன அரசு அவரை தனிச்சிறையில் வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


இதேவேளை, கொரோனா வைரஸை முதன் முதலில் கண்டறிந்து அது தொடர்பில் எச்சரிக்கை விடுத்த லி வென்லியாங் என்ற மருத்துர் உயிரிழந்துள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்