ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான வழக்கு..

குடும்ப அட்டைகள் இல்லாத தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கக் கோரிய வழக்கில், ஒரு வாரத்தில் அறிக்கை அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.


இந்த மனு மீதான விசாரணையின் போது, புலம் பெயர்ந்தவர்களுக்கு அரிசி, பருப்பு போன்றவை வழங்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்கிய பிறகு 1 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்