ரூ.50 லட்சத்திற்கான மருத்து காப்பீடு தேவை...முதல்வருக்கு சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடிதம்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருத்து காப்பீடு வழங்க சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடித்தில், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிக்கையாளர்கள், ஊடகவியாலர்களுக்கு முகவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்புக் கவசங்கள் வழங்கிடவும், முழு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நேரத்திலும், வாழ்க்கையை பணயம் வைத்து பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தலா ரூ.50 லட்சத்திற்கான காப்பீடு வசதியை அரசு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மாநிலத்தில் குறைவான ஊதியத்தில் பணியாற்றும் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள பத்திரிகையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்