தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை...

கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 


விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சடையம்பட்டி, மேட்டுப்பட்டி, இருக்கன்குடி, தாயில்பட்டி, உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து சூழலை குளிர்ச்சியாக்கியது. 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. 


தேனி மாவட்டம் போடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டித் தீர்த்தது. போடி, கம்பம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. 


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்